21 April 2012

அழகைத் தேடி

அழகைத் தேடினேன்,
என் கன்னத்தோடு
ஈரத்தைப் பகிர்ந்துகொள்ள...

ஒரு விரல் தன்னும்
கிட்டவில்லை,
என் கன்னம்தாண்டியும்
கண்ணீர் தட்ட...

அழ கை தேடிய
என்னைப்பார்த்து
சிரிக்கின்றது
அழுகை...