21 May 2014

சுதந்திர நாடென்றுதான் ஆகும்...

சுதந்திர நாடென்றுதான் ஆகும்,
சுதந்திர நாடொன்றில்
வாழாதவரைக்கும்...

சுதந்திர நாடு என்றுதான் ஆகும்..?

சுதந்திரமாய் இருப்பதாய் நினைப்பது,
கிணற்றுத் தவளையின் தப்பல்ல..,
கிணற்றிலிருந்து தப்பவியலா நிலை...

புலம்பெயர் வாழ் தமிழர்
சுதந்திரத் தமிழர் அல்ல...
சுதந்திர நாடொன்றில்
வாழும் தமிழர்...

இனங்கள் சேர்ந்து வாழ்வது,
நம்மால் இயலா நிலை அல்ல...
ஆனால்,
பிணம் தின்னும் இனங்களோடு
சேர்ந்து வாழ்வது,
நமது இயலா நிலை அல்லவா...

இயல் தொலைத்து,
முகாரியும்
மனதுக்குள் இசைத்து,
நாடகமாய் வாழும் தமிழருக்கு,
நாடு அகமாய் என்று ஆகும்..?