கதவுகளால் மட்டுமே
கட்டப்பட்ட
சிறையில்
அடைக்கப்படாமல்
பூட்டிக்கொண்ட
கைதி நான்.
நடக்கக் கிடைத்த பாதைகளில்
மீண்டு(ம்)
நடக்கத் துடிக்கின்றேன்.
ஆனால்,
சாவிக் குவியலில்
பொருந்துவதைத் தேடிப்
புதைந்துபோகின்றேன்.
இடர் தொடரா
என்பது
ஒருவகையில் நிஜம்தான்..,
இடர் தொடராய்...
நீண்டுகொண்டே...
ஒரு திறப்பைத் தேட,
ஒரு பிறப்பு முழுதும் தேவையா..?
தெரியாத போதும்,
தொடரும் இத்தேடல்
திறக்கும்வரை...
அல்லது,
இறக்கும்வரை...