25 May 2015

விளங்குகையில்.., விலங்கு கையில்..!

பாச மனதுக்குத்
தெரிவதில்லை,
தீண்டும் விஷ மனங்கள். 

விஷ மனங்களுக்குப்
புரிவதில்லை,
ஏங்கும் பாச மனம். 

வில(க்)கி இருக்கையில்,
இரு கைகள் போதாது,
விழிநீர் துடைக்க...
ஒரு மனம் போதாது,
சோகம் தாங்க...

வில(க்)கல்களில்
விலகிப் போகின்றது,
வாழ்க்கை...

விளங்குகையில்,
விலக்க முடியாமல்
விலங்கு கையில்..!