தவித்துத் தடுமாறித்
தவிர்த்த போதிலும் தேடிய நான்...
துளிநீரில் தத்தளித்து
இல்லாத் துரும்பு தேடும் நான்...
கண்களின் அடங்காத் தாகம்,
வெளிப்படாத் துளிகளில்
உணர்கின்றேன்...
மனதில் அடங்கும் தவிப்பு,
வெளிப்படும் துடிப்புக்களில்
உணர்கின்றேன்...
என்னை உணர மறுதலிப்பா...
என் உணர்வின் புறக்கணிப்பா...
நாளையும் நானும்,
சேர்ந்தே காத்திக்கின்றோம்
விடியலுக்காக...
நாளை விடிந்ததும்,
மீண்டும் தனித்தவன்தானே
விடியும்மட்டும்...
என்
விடியல் எட்டுகையில்
நான்
துளியில் எட்டும் துரும்பாவேன்.