தனித்துவம், சமத்துவத்தைக்
குலைக்காத வரையில்,
எதிர்ப்புகளும்
பிரதிபலிப்புகளும்
தேவைதானா...?!?
ஏன்
எதற்கு
எப்படி
எனத்
தெரிய/புரிய வில்லை.
ஆனால்,
ஏனெனினும்
எதற்கெனினும்
எப்படியெனினும்
மதங்களுக்கு, மதம் தேவைதானா?!?
தேவை,
மனநல்லிணக்கமே அன்றி,
மதநல்லிணக்கம் அல்ல.
நமக்குள்,
முக்காட்டைச் சாக்காட்டிச்,
சாக்காடு தேவைதானா?!?
மக்குகளாய் இல்லாமல்
மாக்களாய்ச் சிந்திப்போம்.
இல்லையென்றால்,
சிந்திப் போகும் இரத்தத்தில்
சிதறிப் போகும் நித்திலம்!!!