நாதியின்றிப் போனால்கூட
ஜாதிபார்க்கும் சமுதாயம்,
கபோதிகளின் கூடாரம்...
வேதியியல் மாற்றங்கள்,
ஜாதியிலே நிகழவேண்டும்...
ஜாதியில் சிறுதுமியேனும்,
மீதியின்றி ஒழியவேண்டும்...
பாரதியின் கவிவரிகள்,
ஓதிப்போன பின்னும்கூட,
பாதியேனும் மறையாத...
ஜாதி,
சமுதாயப் பேதியாக,
நதியாக ஓட,
நடுவிலே சுகமாய்
சுதிபாடும் நரகர்களாய்
நாங்கள்...
உதிக்கவேண்டும் மதியிலே...
உறைக்கவேண்டும் மனதிலே..
மதிக்கும் மனிதம்...
இனியும்,
ஜாதியில் மிதிபடலாமா..?
ஜாதிகள் ஜோதியாக ஒளிரக்கூடாது...
ஜோதியிலே எரிக்கப்படவேண்டும்...
சதிராடும் ஜாதியை,
சாக்காட்டவேண்டும்...
திதிவைத்து,
முடிவாக்க வேண்டும்...
போதித்து மட்டுமே
போகாமல்,
விவாதித்து மட்டுமே
மாளாமல்,
சாதிக்கவேண்டும்...
காலத்தின் பதிவாக...
நம் விழிப்பின் பதிலாக...
ஜாதியின்றி
மதிக்கப்படும் மனிதமே
உலகவாழ்வின் பெருநிதியம்...
(03.07.2007)
No comments:
Post a Comment