10 September 2014

பிறந்த நாளா... பிரிந்த நாளா...

1979 இல்,
பிறந்தபோது தெரியவில்லை,
அறியாமல் பிரிந்தேன்...

2000 இல்,
பிரிந்தபோது புரியவில்லை,
அறியாமையில் பிறழ்ந்தேன்...

இப்போதோ..,
தெரிகின்றது மனதில் வலி,
புரிகின்றது மனதின் வலிமை,
எனதல்ல..,
தாயது...

இராமனுக்கோ
பதினான்காண்டுகள் வனவாசம்,
இம்மகனுக்கோ இன்றோடு
பதினான்காண்டுகள் வெளிவாசம்.
இராமனுக்கு முடிந்தபோதும்,
எனக்கோ,
இன்னமும் முடியவில்லையே...

வாழக் கிடைத்த வாழ்க்கை
ஒன்றில்,
வாழ்க்கை தந்த வலிகள்
அதிகம்தான்...

நீங்கள் இன்று தந்த வாழ்த்துக்கள்,
நான் என்றும் தந்த வலிகளுக்கு,
மன்னிப்பாகட்டும்...

உங்கள்
தரிசனமும் ஸ்பரிசமும்
இப்பிறந்த வருஷமேனும்
பரிசாய் மீண்டும் கிட்டடட்டும்..,
அம்மா...!!!