28 November 2011

மனிதாபிமானம்

ஒருநாள்..,

வன்முறைகள் யாவும்
அடங்கிவிடும்...
அமானுஷ்ய அமைதி
எங்கும் நிலவும்...

மனித மனம்,
மனிதனைத் தேடி ஏங்கும்.

அன்று,
உலகம் மரணித்திருக்கும்...

அதன் சடலத்தில்
எஞ்சிநிற்கும் சில மனிதர்களிடையில்,
நாம் இன்று எதிர்பார்க்கும்,
மனிதாபிமானம்
அபரிமிதமாக விஞ்சி இருக்கும்...

(21.12.2009)