ஒருநாள்..,
வன்முறைகள் யாவும்
அடங்கிவிடும்...
அமானுஷ்ய அமைதி
எங்கும் நிலவும்...
மனித மனம்,
மனிதனைத் தேடி ஏங்கும்.
அன்று,
உலகம் மரணித்திருக்கும்...
அதன் சடலத்தில்
எஞ்சிநிற்கும் சில மனிதர்களிடையில்,
நாம் இன்று எதிர்பார்க்கும்,
மனிதாபிமானம்
அபரிமிதமாக விஞ்சி இருக்கும்...
(21.12.2009)