“கற்கக் கற்கக் கசடறும்”
கனவுகள் கூட இல்லாத வயதில்
ஒரு நனவுற்பத்திக்கூடம் நுழைந்தோம்...
அங்கு, எமக்குள்,
கனவுகள்
உருவாக்கப்பட்டுச்
செதுக்கப்பட்டுச்
செறிவூட்டப்பட்டு
நிறமூட்டப்பட்டு
நிஜங்களாக்கப்பட்டோம்...
“வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்”
எம் பலம்! எம் உரிமை! எம் அடையாளம்!
எம் வாழ்க்கை!
சிறகுகளை வளர்த்துவிட்ட
நம் பள்ளிக்கூடம் விட்டுப்,
பறக்கத்தொடங்கியதும்,
‘பழைய மாணவர்கள்’
என்றான நாம்,
இன்று
அந்தப் பதம்
களைகின்றோம்.
இன்றுமுதல்,
மீண்டும் ஆகின்றோம்,
நிரந்தரமாய்,
“மகாவித்தியன்”