தெரியாதவ ன்/ள், முடியாதவ ன்/ள்
எனச் சீண்டும்போதுதான்
இந்த மூன்றுகால் முயல்
நான்குகால் பாய்ச்சலில்
நமக்குள் வந்துவிடுகின்றது.
சீண்டல்கள்
பிடித்தவர், பிடிக்காதவரென
யாரிடமிருந்து தூண்டப்பட்டாலும்
இந்த முயல்
நமக்குட் திரியத் தொடங்கிவிடும்.
தெரிந்தே, புரிந்தே
எதிர்க்கின்றோம்..,
எதற்கெனத்
தெரியாமல், புரியாமல்...
நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்பது பிடிவாதம்...
இருந்துவிட்டுப் போகட்டும்...
நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
ஆக்குவது வக்கிரம்...
வேண்டாமே...
வாழ்க்கைத் தேடலில்,
மூன்றுகால் முயல் முடிச்சுப்போடும்...
விஞ்ஞான, பிரபஞ்சத் தேடலில்
மூன்றுகால் முயல் முடிச்சவுக்கும்...
எதுவுமே உண்மைதான் பொய்யாகும்வரை...
எதுவுமே பொய்தான் உண்மையாகும்வரை...
(09.03.2011)
No comments:
Post a Comment