எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...
ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...
உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...
'இச்'சத்தத்தைக் காவிச்செல்லும்
'அலைபேசி'தானே என்ற அலட்சியத்தைத்
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு...
*****
நித்திரைக்கு முன்
அப்போதும் இப்போதும்
அணைக்கின்றேன்
அலைபேசியை...
அப்பொழுது
அவ ளை/னைத் தேடி..
இப்பொழுது
அதனைத் தேடாதிருக்க...
(06.04.2011)
No comments:
Post a Comment