08 December 2011

எனதாக, எனக்காக, ஏக்கம்...

பட்டுத் திருப்பித் தெறிக்கும் ஏக்கங்கள்...

நம் நாட்டிலிருந்தபோது
ஏக்கங்கள் இருந்தனதான்,
இந்நாடுகள் மீது...

வாழ வந்தபின்னர்,
பெற்றவை வசதிகளாக
இழந்தவை வாழ்க்கையாக
ஏக்கங்கள் வலிகளாகின்றன...

இந்த வாழ்க்கையை விரும்பியவர்களே,
இங்கு வாழ்க்கையைத் தேடுகின்றோம்...

வாழ்க்கை..,
நம் நாட்டில் ஏங்கிக் காத்திருக்கின்றது,
நமக்காக...


(06.04.2011)

No comments:

Post a Comment