26 January 2012

தூரமாகிய நான்

விலகிச் சென்றதால்
தூரமாகிப்போனேன் என்கின்றேன்..,
விலக்கப்பட்டேன் எனப்
பழி சுமத்த விரும்பாமல்...

பழகிய கணங்களின்
ஞாபகத் திசுக்களை
பழகியதால் வந்த கனதிகள்
நசுக்க,
கசிந்த கலவையில்
நசிந்து மசிந்திருந்த உறவை
வடித்துப் பிரித்து
வைத்திருக்கின்றேன்,
மீண்டும் பொதித்துவிட
விரும்பாமலே...

மீண்டும்
பொதிந்து வைத்துப்
பொசுக்கக் கொடுப்பதிலும்
பாசம் சடலமாகவே
இருந்திடட்டும் என்னிடம்...

பழகாமலே இருந்திருக்கலாம்,
தூரமாகிப் போவேன் எனத் தெரிந்திருந்தால்...

(26.01.2012)

No comments:

Post a Comment