அணு உலைகள் எதற்கு...
ஒரு பார்வைக்கு
இத்தனை சக்தி இருக்க...
பாவை பார்வையில் பட்டாலும்
பாவையின் பார்வை பட்டாலும்
உடலெங்கும் உயரழுத்த மின்சாரம்...
மின்கலமாவது தேவைதான்...
அவள் வராததால்
வரும் மின்தடைக்காய்...
அவள் இவன் சம்சாரம் ஆவாளோ
இவன் அவள் சஞ்சாரி ஆவானோ
இவன் காலமும்
அவள் காதலும்
தீர்மானிக்கும்...
அதுவரைக்கும் காகிதம்
கையிலேயே இருக்கட்டும்,
கவியெழுதவும்..,
கண்ணீர் துடைக்கவும்...
(31.05.2011)
No comments:
Post a Comment