19 January 2012

மனவோவியம்

மணல் ஓவியத்தைத்
தென்றல் கலைத்தபோது
திட்டினேன்...

கடலலை வந்து முத்தமிடக்
காத்திருந்தேன்...

வந்த கடலலை முத்தமிட்டது...
வந்த வேகத்திலேயே
கவர்ந்து சென்றுவிட்டது...

கலைந்தது..,
நான் வரைந்த மணலோவியமும்..,
நான் கொண்ட மனவோவியமும்...

கவரப்பட்ட போதிலும்
கரையவில்லை...
கடற்கரை மணலும்..,
என் மன நினைவும்...

(27.10.2007)

No comments:

Post a Comment