2021
உணவு இல்லா உலகு இல்லை!
தேவையுமில்லை!
உயிர்ப்போடு இருக்கவும்
போவதில்லை!
தியாகதீபத்திற்கு,
உணர்வும், உரிமையும்
இல்லா உணவு
தேவையாயிருக்கவில்லை…
கையில் இருந்த ஆயுதத்தைக்
கீழே வைத்துவிட்டு,
அடிவயிற்றில் பசித் தீ மூட்டி,
தானே ஆயுதமானான்.
அன்று,
அந்தக் கொடுமையைச் செய்யவைத்த,
நாடுகள் உட்பட்டு,
இன்று,
உலகமே கொடுந்தொற்றால்,
உணவு பற்றாமல், தவிக்கின்றது…
உணர்கின்றார்களோ இல்லையோ,
அந்நாடுகள் உட்பட்டு
உலக நிலை மாற வேண்டும்…
ஏனென்றால்,
போரிடர், பேரிடர்களில்
தவித்த காலத்திலும்,
ஈழத்தமிழன்,
உணவுக்காகத் தவிப்பவனைப்
பார்த்துத்
தவித்த முயல் அடித்தவனில்லை.
தியாக தீபத்தின் தியாகம்,
பசித் தீ மூட்டி,
அவனை அணையவைத்த,
பாரத நாட்டிலும்,
நம் நாட்டிலும்,
ஒளியாகிச் சுடர்ந்து
இன்றைய பஞ்சத்தை
எரித்திடட்டும்…
வீர வணக்கங்கள்!
🪔🕯🪔
2020
பசிக்கின்றது எனக்கு...
தியாக தீபத்திற்கு...
🪔🕯🪔
2019
‘பசி’
உலகின் முக்கிய இயங்கலே,
இதனைத் தவிர்ப்பதில்தான்...
உடலில் உணரப்பட்டால்
பசி, உணர்வு...
உணர்வில் உணரப்பட்டால்
உணர்வே, பசி...
உணர்வில் உணர்ந்து,
பசி இருப்பையே தவமாக்கி,
உடலும் உயிரும் துறந்த,
உன்னதம்,
தியாகதீபம்!
வீரவணக்கங்கள்!
2018
எதிர்க்க முடியாத
ஆயுதம் ஏந்தி,
எதிரி எதிர்பார்க்காத
வெற்றியை ஏந்தியது,
தியாகதீபம்!
அன்று
பணியாத எதிரி,
தீபம்
அணைந்த பின்,
தலைகுனிந்தபடியே
இன்றளவும்...
நீராகாரமின்றி
மரணித்த திலீபன்,
அடையாள உண்ணாவிரதி அல்ல..,
உண்ணாவிரதத்தின் அடையாளம்...
மரணித்துத் தோற்றவனல்ல,
மரணத்தை வரவேற்று வரலாறானவன்.
தலைவணங்கி,
வீரவணக்கங்கள்...
2013
உணர்வா... உணவா...
உணர்வாய் என்று
உணர்வாய் நின்று
உணர்த்தினான்...
உன்னதமானான்...
திலீபன்...
என்றும் ஒளிரும் தீபம்...
No comments:
Post a Comment