12 March 2011

உன்னால்

நம்பிக்கைகள்
உடைக்கப்பட்டது உன்னால்,
நம்பிக்கை தந்தது
நீ என்பதால்
உடைத்தாயோ..?

சந்தோஷம்
தகர்க்கப்பட்டது உன்னால்,
சந்தோஷம் தந்தது
நீ என்பதால்
தகர்த்தாயோ..?

ஆறுதல்
பறிக்கப்பட்டது உன்னால்,
ஆறுதல் தந்தது
நீ என்பதால்
பறித்தாயோ...?

இவ்வளவும்
எடுத்துவிட்டு
வாழச்சொன்னால்..,
நான் என்ன
கல்லறையா..,
பிணம் சுமக்க..?


(15.06.2007)

1 comment: