ஓராயிரம் வார்த்தைகள்,
ஒரு கோடி வார்த்தைகள்
பேசிக் கொண்டாலும்
திருப்தியும் கொள்ளாது,
அடங்கியும் கொள்ளாது,
மனது...
ஏதோவொரு வரையறுக்கப்பட்ட
எண்ணிக்கைதானே வரும் வார்த்தைகள்...
மௌனம் அப்படியா...
முடிவிலியாய்
தொடர்ந்து தொடந்து
மனதும் மனதும்
பேசிக்கொள்ளுமே...
மௌனத்தை உணரத்
தேவை மௌனம்...
மௌனத்தை உணர்ந்தால்
போதும் மௌனம்...
(01.05.2012)
No comments:
Post a Comment