என்று வரை..?
கலங்கலாக்கி மறைத்துச்
சாட்சிக்கான இந்தக் காட்சிகள்
என்று வரை..?
நீதி வழங்கத் துணிவில்லா உலகே..,
என் தமிழச்சிகளின்
உடலங்கள் போர்த்தச்
சிறு துணி வழங்கக்கூடத்
துப்பில்லையா உனக்கு..?
05.01.2011
பாதவிரல்களின் வடிவம் கூட,
பூமியின் பதிவிற்தானே
புருஷனுக்கும் முழுமையாய்த்
தெரியவரும்...
ஆங்காங்கே,
நம் கலாச்சாரத்தைத் தின்னும்
கலாச்சாரங்கள் இருந்தாலும்,
பண்போடுதானே இருந்தது
நம் பண்பாடு...
பிணமானபின்னும் புணரும்
வெறிச்செயலின் சாட்சிகளான
இக்காட்சிகள் கூட
உலகின் மனச்சாட்சியை
உசுப்பவில்லை என்பது,
உலக, மனித மாட்சிக்கே
பெருங்கறையன்றோ...
குற்றவாளிகள் தப்பித்தாலும்,
நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது
என்று அறிவுறுத்தும் உலக நியதி..,
இங்கு மட்டும்,
மரணச்சாட்சிகளின்
நிர்வாணத்தைக் கூடக்
கண்டுகொள்ளாதது என்ன நீதி...
புதைகுழி தோண்டி,
மண்ணாற்கூட
உங்களை மூடமுடியாமைக்கு
வெட்கித்து,
மனக்குழிகளில் உங்களை
ஆழப்புதைக்கின்றோம்...
மன்னித்துவிடுங்கள்...
06.01.2011
http://www.channel4.com/news/fate-of-tamil-actress-chilling-new-evidence-from-sri-lanka
No comments:
Post a Comment