வளர்ந்த மரத்தை
வெட்டிவிட்டு,
மரமாகப்போகும் செடிக்குப்
பாதுகாப்பு...
நேற்று,
வெட்டப்பட்ட இந்த மரமும்
பாதுகாக்கப்பட்டிருக்கலாம்...
நாளை,
பாதுகாக்கப்படும் இந்தச் செடியும்
வெட்டப்படலாம்...
இந்த மரத்தில்
சாய்ந்துகொண்டு
இந்த மரத்தின் நிழலில்
நனைந்துகொண்டு,
மறைந்துகொண்டு,
மன நிலவை ரசித்திருந்த நாட்களை
இந்த மரம்
இன்னமும் நினைவு வைத்திருக்கும்.
மீண்டும் ஒருமுறையேனும்
வெட்டப்பட்ட இந்த மரத்திலாவது
சாய்ந்துகொள்ளக் கிட்டுமா...
அதுவரை,
இதையேனும் விட்டுவைப்பார்களா...
மரமே...
என் மனதுக்குள் உன் வேர் வரும் என்றால்,
அழும் மனதின் ஈரம் தருவேன்,
நீ மீண்டும் துளிர்க்க...
(12.08.2012)
No comments:
Post a Comment