ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ச்
சிதையாத தமிழுக்குச் சிதையா???
அழிக்கப்பட்டது
தமிழின் ஒரு கருவூலமே
அன்றித்
தமிழின் கரு மூலம் அல்ல...
'அழிவு'க்கே
'அ'கரம் கொடுத்து
ஆக்கிய தமிழ்
அழியுமா???
ஒலிகளுக்கும்
வரிவடிவம் கொடுத்து
ஒளிரும் தமிழ்
ஒழியுமா???
எரியூட்டக் கருகியது,
தமிழ் நூற்களே
அன்றித்
தமிழ் அல்ல...
அதனால், என்றும்,
'தமிழ்' நூற்கும்
தமிழ் நூற்களை...
நேற்றைய கரி தொட்டு
இன்று வரையும் மொட்டு
நாளைகளெல்லாம்
விரிந்து கொண்டேயிருக்கும்.
சிதை யாதும் தமிழ்
என்றாலும்
சிதையாது தமிழ்!!!
No comments:
Post a Comment