நினைத்தது கிடைக்காமல்
கிடைக்கும் சுகமும்
சோகமாகத்தானிருக்கும்...
நினைத்தது கிடைத்துக்
கிடைக்கும் வலிகூடச்
சுகமாகத்தானிருக்கும்...
மனதைத்
தெரிந்துகொள்ளவும்
புரிந்துகொள்ளவும்
முடியுமென்றால் மட்டுமே,
மாச்சர்யங்கள் இல்லாத
மனித மனங்கள்
உலகில் உலா வரும்.
சாத்தியமாக்குமோ
விஞ்ஞானமோ..,
மெய்ஞானமோ...
அல்லது
சாத்தியமாக்க வேண்டுமோ
ஓர் புது ஞானம்???
No comments:
Post a Comment