28 February 2018

மனதும்.., சிதையும்...

மனம் வருத்திப் பார்க்கும் மனங்கள்
அறியுமா,
மனம் நொருங்கி மடியும் மனதை???

பதைக்கவைத்துப்
படபடக்கவைப்பதால்
கிட்டப்போவது,
எட்டப் போகும்
மனதின்
சிதைவன்றி
மகிழ்வல்ல.

சோகம் சொல்லவும்,
பாசம் கொள்ளவும்,
மடிகிட்டாத மனிதன்
மடியும்வரை தனியன்தான்.

நாளை
பிணங்களுக்கு
ஆரமிட்டு அழுவதைவிடுத்து,
இன்று
மனங்களை
ஆராதிக்கலாமே...

No comments:

Post a Comment