09 March 2011

கவிதை

வரிகள் செதுக்கும்,
உணர்வின் சிற்பம்...
மொழியின்,
அழகிய பிரசவம்...


சுகத்தில்,
தெறித்துச் சிதறுவது...
சோகத்தில்,
சிதறித் தெறிப்பது...


மோகத்தில்,
பதறிச் சிலிர்ப்பது... 
தாபத்தில்,
சிலிர்த்துப் பதறுவது...


மென்மையில்,
வன்மை சொல்லும்...
வன்மைக்குள்,
மென்மை தேடும்...


அடக்கும்போது,
அலறி வெடிக்கும்...
வருடும்போது,
கொஞ்சிக் குலவும்...


ஒப்பனையின் உச்ச மோகனம்...
கற்பனையின் வேக வாகனம்...
கவிதை..!


(22.09.2007)

No comments:

Post a Comment