20 March 2011

பூக்கள்


இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே 
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

*****

பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால், 
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...

*****

சொரியும் பூக்களின் அழகை ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

(20.12.2010)

No comments:

Post a Comment