இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...
அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...
*****
பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால்,
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...
*****
சொரியும் பூக்களின் அழகை ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...
(20.12.2010)
No comments:
Post a Comment